Ads Area

“மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்று முஸ்லிம் காங்ரசை விட்டு வெளியேறுகிறார் மாஹிர்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஊர்ஜிதமாக தெரிவித்தார்.

கட்சியை விட்டு வெளியேறவுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தொடர்பு கொண்ட வேளையிலேயே மாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற மு.கா.வின் உயர்பீட கூட்டங்கள் இரண்டுக்கு அவர் தொடராக செல்லாமல் இருந்தமையிலிருந்து மாஹிரின் கட்சி விலகல் விரைவில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என ஊகிக்க கூடியதாக இருந்தது. இதன் பின்னர் வெளியாக தகவல்களையடுத்து அவரிடம் வினவியபோதே, அவர் இக் கருத்தை தெரிவித்தார்.

மேலும், கட்சியை விட்டு வெளியேறுகின்ற அவர் எந்தக் கட்சியில் இணைந்து தனது அடுத்த அரசியல் நகர்வை மேற்கொள்வுள்ளார் எனும் தகவலை இதுவரையில் அவர் ஊர்ஜிதப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் இவரின் வெளியேறல் குறித்த கட்சியில் தொடராக அவருக்கு விதைக்கப்பட்டு வந்த உள்குத்து விவகாரங்களினாலும், பல விடயங்களில், சேவைகளில் அவரின் உள்ளிணைவு இருந்தபோதிலும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலரின் உள்வெட்டு முஸ்தீபுகள் தான் வெளியேறக் காரணம் எனவும் அறியக் கிடைத்தது.


இந் நிலைமையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அ.இ.ம.கா., தே.கா. அல்லது பொதுஜன பெரமுன ஆகிய மூன்றிலொரு கட்சியில் இணைந்து பயணிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.

தகவல் - கியாஸ் ஏ புஹாரி.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe