கேரள மாநிலம் ஆலம்புழாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கேரள ஜோடிக்கு எதிர் வரும் 19ம் திகதி ஹிந்து முறைப்படி திருமணம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கேரளா ஆலம்புழா மாவட்டத்தில் செருவல்லி பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு அருகே வசித்து வந்த அசோகன் என்பவர் கடந்த 2018 இல் இறந்தார் இதனையடுத்து அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.
இதனையடுத்து, அஞ்சுவுக்கு 10 சவரண் நகையும் 2 இலட்சம் ரூபாய் நிதியும் வழங்க ஜமாத் கமிட்டி முடிவு செய்து திருமணத்தை பள்ளிவாசல் வளாகத்திலேயே நடாத்திக் கொள்ளவும் அனுமதியளித்தது. இதனையடுத்து அஞ்சுவுக்கு எதிர் வரும் 19ம் திகதி பள்ளிவாசல் வளாகத்தில் திருமணம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மூலம் https://www.telegraphindia.com