Ads Area

கட்டுநாயக்காவிலிருந்து முல்லைத்தீவு சென்ற வாகனம் குளத்துக்குள் பாய்ந்து மூழ்கி விபத்து (Photos)



வவுனியா, கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த கயஸ் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

வாகனமானது வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. எனினும், வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.


குறித்த வானில் 4 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சிறு காயங்களிற்கு உள்ளாகி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe