'பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு' என்ற தொணிப் பொருளில் மலர்ந்த எம் தாய் நாட்டின் சுதந்திர தினத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. M.H.M. Azaath அவர்களினால் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டது. சம்மாந்துறை மண்ணிலிருந்து சுதந்திரத்துக்காக பாடுபட்ட, உயிர்தியாகம் செய்த பெரியார்களையும் வைத்திய அத்தியட்சகர் ஞாபகப்படுத்தி கௌரவித்தார்.
வைத்திய அத்தியட்சகரின் ஆலோசனைப்படி இவ்வருடம் ஒவ்வொரு ஊழியர் உத்தியோகத்தரும் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு மரம் நட்டு அதைப் பராமரிக்க வேண்டும் என்றார். இதனடிப்படையில் தாதிய உத்தியோகத்தர் அசாட் அவர்களினால் மா மரமொன்று நடப்பட்டது.
"சூழலை சுத்தமாக்க மரம் நடுவோம்"