(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் வைத்தியர்கள் ஒன்றியம் ஆகியன ஏற்பாடு செய்த இரு வேறு ஊடகவியலாளர்கள் சந்திப்பு வைத்திய சாலையின் கேட்போர் கூடத்தில் (08) நடைபெற்றது.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சில தனியார் தொலைக்காட்சிகளில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோம் நடைபெறுவதாகவும் கடமைக்கு வருபவர்கள் கடமையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியான செய்தி வைத்திய சாலையின் நற்பெயருக்கும் தாதி உத்தியோகத்தர்களுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் இவருக்கு எதிராக தாதி உத்தியோகத்தர்கள் பலரும் கிட்டத்தட்ட 145 குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் எமக்கு கிடைத்துள்ளன.
இதே வேளை ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் வைத்தியசாலையின் தொடர் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. உத்தியோகத்தர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகத்தில் விமர்சனத்திற்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஒன்றியம் இங்கு நடாத்திய மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்