Ads Area

கத்தார் - வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள்!

கத்தார் பாதையோரங்களில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அண்மையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். ஷெஹானிய்யா நகராட்சி அதிகாரிகளினால் அபூ-நஹ்லா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி திடீர் சோதனையில் பாதையோரத்தில் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுடன் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

வீதியோரங்களில் விற்பனையில் ஈடுபடுவது கத்தாரில் தடையாகும். இவ்வாறு ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தகுந்த சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe