Ads Area

சாய்ந்தமருது நகரசபையை மனதார வரவேற்கிறோம் - காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர்.

எமது அண்டைய கிராமமான சாய்ந்தமருதூருக்கு நகரசபை கிடைத்ததையிட்டு சந்தோசமடைகின்றோம். அதனை மனதார வரவேற்கின்றோம். அதேபோல் தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளையும் அரசியல் தலைவர்கள் மதிக்கவேண்டும்.

இவ்வாறு சாய்ந்தமருது நகரசபையாக வர்த்தமானிப்பிரகடனம் செய்துள்ளமையையடுத்து காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

சாய்ந்தமருதுக்கு இவ் அந்தஸ்து எப்பவோ கிடைத்திருக்கவேண்டும். இருந்தபோதிலும் அந்த சகோதரமக்களின் தொடர்ச்சியான போராட்டம் தியாகம் வெற்றியளித்திருக்கிறது.இறைவனின் நாட்டம் தற்போது கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.நாம் அன்றும் இதற்கு ஆதரவாய் இருந்தோம் இன்றும் இருக்கிறோம் என்றும் இருப்போம்.அருகிலுள்ள ஓர் உள்ளுராட்சி மன்றத்தலைவர் என்ற அடிப்படையில் நாமும் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழ்மக்களையும் தமிழ்த்தலைவர்களையும் பொறுத்தவரை ஏனைய இனத்தின் உரிமைவிடயத்தில் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.இருக்கப்போவதுமில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் தலைவர்கள் தமிழர்கள் விடயத்தில் முட்டுக்கட்டையாக இருந்துவந்துள்ளனர். இனியாவது அவர்கள் அந்த மாயையிலிருந்து விடுபடவேண்டும்.

அதேபோல தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகள் கோரிக்கைகள் உணர்வுகளையும் ஏனைய இன தலைவர்கள் புரிந்துகொண்டு தீர்த்துவைக்கமுன்வரவேண்டும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe