Ads Area

யாழ். பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாணவர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு.

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீட்டத்தில் மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்திய 8 பேரிற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று பத்தாம் திகதி முதல் விதித்துள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் மீது கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மாணவிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணை மேற்கொண்டு வந்த ஒழுக்காற்று குழு விசாரணைகளின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe