Ads Area

ACMC இன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸ் தேசிய காங்ரஸில் இணைவு.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சியாமா சியாஸ் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று தேசிய காங்ரஸில் அக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா முன்னிலையில்  இன்று (09) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான பேராசிரியர் எஸ்எம்.எம்.இஸ்மாயில் தனது ஆதரவாளர்களுடன் இன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்ரஸில் இணைந்து கொண்டார்.

இந் நிகழ்விலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சியாமா சியாஸ் அவர்களும் தேசிய காங்ரஸில் இணைந்து கொண்டார்.

இதே வேளை அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சி.எம். சஹீல் அவர்களும் முஸ்லிம் காங்ரஸில் இணையவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன https://www.sammanthurai24.com/2020/03/Sammanthurai-saheel.html





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe