கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனு நிலுவையில் இருந்ததால் தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது.