உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய வைரஸ் நோயான கொரோனா தற்போது வளைகுடா நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கட்டாரில் நேற்று மாத்திரம் 238 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளார்கள் அதே போல் சவுதி அரேபியாவிலும் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன இதுவரை சவுதியில் 45 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த நாடுகளைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் பணிபுரிவோர் யாரும் அந் நாடுகளுக்குச் செல்லவோ அல்லது அந் நாடுகளில் இருந்து சவுதிக்கு வரவோ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் அங்கிருந்து வருவதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
செய்தி மூலம் - https://english.alarabiya.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.