கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒன்றிணைந்தனர்.