Ads Area

டுபாயில் தான் வேலை செய்த நிறுவனத்தில் பெண் போன்று உடையணிந்து 227,000 திர்ஹம் கொள்ளையடித்த நபர்.

டுபாயில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் பெண்கள் போன்று ஹபாயா ஆடையணிந்து 227,000 திர்ஹம் பணத்தை கொள்ளையடித்தமைக்காக டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

டுபாயில் நைப் (Naif) பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் 227,000 திர்ஹம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக டுபாய் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து டுபாய் பொலிஸார் உடனடியாக அந் நிறுவனத்தில் உள்ள CCTV கெமறாக்களை பரிசோதனை செய்துள்ளர் அதில் பெண் ஒருவர் அந் நிறுவனத்தில் உள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளமை பதிவாகியிருந்தமையை அடுத்து பொலிஸார் தீவிர விசாரனை நடாத்தியுள்ளனர்.

வீடியோவில் பதிவாகியுள்ள அப் பெண்ணின் நடை, அசைவு போன்ற உடல்மொழியில் சந்தேகம் கொண்ட பொலிஸார் இது பெண் அல்ல இது ஒரு ஆண் என்றும் பெண் போன்று ஹபாயா அணிந்து வந்து திருடியுள்ளதாக கண்டுபிடித்து வீடியோவில் பதிவாகிய நபரின் உடல் அசைவோடு ஒத்துப் போகும்  அந் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவரை கைது செய்து விசாரித்ததில் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

பணம் திருட்டுப் போய் 4 மணி நேரத்திற்குல் திருடியவரையும், திருடிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe