சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட வேளையில் சலுான் கடைக்காரரை வீட்டு அழைத்து வந்து முடி வெட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவருக்கு 5 வருட சிறை தண்டனையும் 3 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வருவதற்காக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வியாபார நிலையங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சவுதி அரேபியாவில் அல்- கசீம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஊரடங்கு உத்தரவு வேளையில் தனது தலை முடியை வெட்டிக் கொள்ள சலுான் கடைக்காரர் ஒருவரை தனது வீட்டுக்கு வரவழைத்து, முடி வெட்டி அதனை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருந்த நிலையில் இவர் தற்போது சவுதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஊடரங்கு உத்தரவினை மீறியது மாத்திரமல்லாது தான் செய்த குற்றத்தை ஆதாரபூர்வமாக படம் பிடித்து அதனையும் செயார் செய்துள்ளார். சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவு விதி மீறல்களை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ படம் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்வது தண்டனைக்குரிய குற்றமெனவும் அறிவிருத்தப்பட்டிருந்தது.
செய்தி மூலம் - https://lifeinsaudiarabia.net and https://www.arabnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.