உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. வல்லரசு நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸுக்கு இதுவரை சர்வதேச அளவில் இதுவரை 1.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பேரழிவுக்கு இடையே, ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சில நபர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் வீடியோதான் அது. அதாவது, கொரோனாவால் உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், அதனை கிண்டலாக புரியவைக்கவே அந்த வீடியோ பரவியது.
இந்த வீடியோ காட்சிகள் மீம்ஸ்களாகவும் பரப்பப்பட்டன. பலரும் இது திரைப்பட காட்சி என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.
இறுதிச்சடங்கில் நடனமாடுவதற்கும், சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனமாடுவதற்காகவும் இந்தக் இயங்குகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினரின் முழு விருப்பத்தின் பேரில் நாங்கள் நடனமாடுகிறோம் என்ற்கு பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பெஞ்சமின் ஐடோ.
தங்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள் இழந்தவர்கள் வலி வேதனையில் இருந்து வெளியே வந்து புன்னகைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கிறது அவரின் குழு. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஐடோவின் குழு நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இதனால், பலரும் தங்களது குடும்பத்தில் ஏதாவது மரணம் நடந்தால், ஐடோவின் குழுவை அழைத்தனர். அந்நாட்டின் பல வி.ஐ.பி-களின் வீட்டிலும் ஐடோ குழுவின் கால்கள் நடனமாடியுள்ளன.
பல நாடுகளிலும் இந்த மீம்ஸ்களை பயன்படுத்தி அரசு மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்லியுள்ளது. நெட்டிசன்களும், ஐடோ குழுவின் வீடியோக்களை வைத்து கலக்கலாக மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.