Ads Area

வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்துக்கள் இஸ்லாத்தை இழிவு படுத்தினால் அவர்களை அடையாளப்படுத்தவும் - சவுதி மார்க்க அறிஞர் வேண்டுகோள்.

சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்துத்துவ கோட்பாடுகளைப் பின்பற்றும் இந்துக்கள் இஸ்லாம் மார்க்கத்தினையும், முஸ்லிம்களையும் பற்றி இழிவாக பேசினாலோ, மத விரோத கருத்துக்களைப் பரப்பினாலோ அவர்களது வேலைகள் பரிக்கப்பட்டு உடனடியாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என சவுதி அரேபிய மார்க்க அறிஞர் அபிதி சஹ்ரானி (Abidi Zahrani) தெரிவித்துள்ளார்.




இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர் அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதும் அவர்களுக்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றது இவ்வாறான நிலையில் இந்துத்துவத்தைப் பின்பற்றும் பாசிச இந்துக்களைில் சிலர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் (ஸல்) இழிவுபடுத்தி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இஸ்லாமிய விரோத கருத்துக்களை பரப்பும் இந்துக்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவோர் பற்றி தெரிவிக்கப்பட்டால் அவர்கள் இருக்கும் இடங்களை கண்டு பிடித்து அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகை ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்றை சம்பந்தப்படுத்தி முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சில இந்துத்துவவாதிகள் கொச்சைப்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

அண்மையில் டுபாயில் பணி புரிந்த ஒருவர் இவ்வாறு இஸ்லாத்தை கொச்சைப்டுத்தி முகநுாலில் பதிவிட்டமையும், அவரை அவர் பணிபுரிந்த நிறுவனம் உடனடியாக பணியில் இருந்து நீக்கியமையும் இங்கு மேலும் குறிப்பிடத் தக்கதாகும் ( இதோ அந்தச் செய்தி - http://www.sammanthurai24.com)

செய்தி மூலம் - http://www.sabahnews.net and https://www.middleeastmonitor.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார் (chief Editor - Sammanthurai24)








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe