சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்துத்துவ கோட்பாடுகளைப் பின்பற்றும் இந்துக்கள் இஸ்லாம் மார்க்கத்தினையும், முஸ்லிம்களையும் பற்றி இழிவாக பேசினாலோ, மத விரோத கருத்துக்களைப் பரப்பினாலோ அவர்களது வேலைகள் பரிக்கப்பட்டு உடனடியாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என சவுதி அரேபிய மார்க்க அறிஞர் அபிதி சஹ்ரானி (Abidi Zahrani) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் இஸ்லாமிய விரோத கருத்துக்களை பரப்பும் இந்துக்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவோர் பற்றி தெரிவிக்கப்பட்டால் அவர்கள் இருக்கும் இடங்களை கண்டு பிடித்து அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டுபாயில் பணி புரிந்த ஒருவர் இவ்வாறு இஸ்லாத்தை கொச்சைப்டுத்தி முகநுாலில் பதிவிட்டமையும், அவரை அவர் பணிபுரிந்த நிறுவனம் உடனடியாக பணியில் இருந்து நீக்கியமையும் இங்கு மேலும் குறிப்பிடத் தக்கதாகும் ( இதோ அந்தச் செய்தி - http://www.sammanthurai24.com)
செய்தி மூலம் - http://www.sabahnews.net and https://www.middleeastmonitor.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார் (chief Editor - Sammanthurai24)