Ads Area

கொரோனா அச்சம் நீடித்தால் தராவீஹ் மற்றும் பெருநாள் தொழுகைகளை வீட்டிலேயே தொழலாம் - சவுதி மார்க்க அறிஞர்.

சவுதி அரேபியாவில் கொரோன தொற்று நோயை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை சவுதி அரசு மேற் கொண்டு வரும் இவ் வேளையில் கொரோனா தொற்றின் அச்சம் தொடர்ந்தும் நீடித்தால் எதிர் வரும் புனித ரமழான் மாத தராவிஹ் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாள் தொழுகைகளையும் வீட்டிலேயே தொழுது கொள்ள முடியும் என சவுதி அரேபிய பிரபல மார்க்க அறிஞரான ஷேக் அப்துல் அஸிஸ் பின் அப்துல்லா அல் அல்-ஷேக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ரமழான் மாத தராவிஹ் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகைகள் பற்றி பல தரப்பினராலும் தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வந்த கேள்விகள் தொடர்பாக சவுதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சு இது தொடர்பாக விளக்கம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சவுதியில் கொரேனா அச்சம் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற மக்கள் தங்களது வீடுகளில் தொழுது கொள்வது பொருத்தமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கியாமுல் லைல் தொழுகையை தனது வீட்டில் தொழுதுள்ளார்கள் மேலும் தராவிஹ் தொழுகை சுன்னத்தான தொழுகைதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல் நோன்பைத் தொடர்ந்து வரும் பெருநாள் தொழுகை பற்றிக் கேட்கையில் சூழ்நிலை சாதகமாக அமையாவிட்டால் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம், பிரசங்கம் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடைசி நோன்பின் சூரிய அஸ்தமனத்திலிருந்து தக்பீர் முழக்கம் சொல்லாம் என்றும் பெருநாள் கால நோன்பு கால ஸக்காத்களையும் வழங்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe