கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக மஜீட்புர கிராமத்தில் நாளாந்த வருமானத்தை இழந்து வாடும் கூலித் தொழில் செய்யும் குடும்பங்களுக்கும், விதவைத் தாய்மார்களுக்கும் அவர்களின் தேவையறிந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர் சகோதரர் YBM அஸ்மி அவர்களின் முயற்சியினால் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
சம்மாந்துறை சமூக அபிவிருத்திக்கான அமைப்பு சகோதரர் YBM அஸ்மி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது முயற்சியினால் இவ் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை சமூக அபிவிருத்திக்கான அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க சகோதரர் YBM அஸ்மி அவர்களினால் சம்மாந்துறையிலும் நாளாந்த கூலித் தொழிலை இழந்து வாடும் குடும்பங்களுக்கு தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
சமூக அபிவிருத்திக்கான அமைப்பு
சம்மாந்துறை.