எம்.ஐ.சர்ஜுன்
கொறோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்தல், ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக கிளினிக் சிகிச்சை பெறுவோர் வைத்தியசாலைக்கு வருவதில் உள்ள சிரமங்களை கருத்திற் கொண்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை நிருவாகமானது முறையாக கிளினிக் சிகிச்சை பெறுவோருக்குத் தேவையான மருந்துகளை கடந்த மாதம் தொடக்கம் வழங்கி வருகின்றது.
வைத்தியசாலையில் உள்ள பதிவேட்டில் தபால் விலாசங்கள் முறையாக பதியப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துப் பொருட்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு நேரடியாக வருவோருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தொடர்ந்தும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே, சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் யாருக்காவது இதுவரை மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லையாயின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொலைபேசி இலக்கம் - 0777119683
மேலும், வயதானவர்களுக்கு கொறொனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் கிளினிக் சிகிச்சை பெறுவோரில் 60 வயதைத் தாண்டியவர்கள் கிளினிக் மருந்துகளைப் பெற வைத்தியசாலைக்கு நேரடியாக வருவதை முடியுமானதை தவிர்த்து தேவையேற்படுமிடத்து வேறு எவரிடமானது தங்களது கிளினிக் கொப்பிகளை கொடுத்தனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நாட்டின் தற்போதைய சூழலில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், தாதியர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் அபிவிருத்திச் சங்கம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம்
பிரதேச வைத்தியசாலை
சாய்ந்தமருது.