(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் அல்-மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டு தாக்கதலால் உயிர் நீத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்தும் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் விசேட துஆப் பிராத்தனை இன்று இடம்பெற்றது.
இதன்போது முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கினங்க தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும், நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களும் விசேட துஆப் பிராத்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.