Ads Area

சம்மாந்துறையில் ஈஸ்டர் தாக்குதலினால் உயரிழந்தோரை நினைவு கூர்ந்து விசேட பிரார்த்தனை.

பாறுக் ஷிஹான்

இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் இன்று செவ்வாய்க்கிழமை (21 )  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.  ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இதனடிப்பையில்  சம்மாந்துறையிலும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. இந் நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் நம்பிக்கையாளர் உப செயலாளர் அஷ்செய்க் இஸ்காக் நளிமீ முச்சபை தலைவர் செயலாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe