பாறுக் ஷிஹான்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை சம்மாந்துறை பகுதி பிரதேசவாசி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்த வதந்தி தொடர்பாக திங்கட்கிழமை(20) மாலை கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
அதன் பின்னர் அங்கிருந்து அவரில் இருந்து சில கூறுகளை பெற்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு ஆய்வு செய்ய அனுப்பினோம்.எனினும் குறித்த நபருக்கு எவ்விதமான கொவிட் தொற்று இல்லை என நெகடிவ் என ஆய்வறிக்கைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.எனவே சம்மாந்துறை பகுதி மக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம்.அத்துடன் சமூக ஊடகங்களை பாரிய பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை எமக்கு வழங்க வேண்டும்.