அப்பொது மன்னிப்புக் காலம் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு இலங்கையர்களுக்கு ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான ஐந்து தினங்களை சரணடைவதற்காக அறிவித்துள்ளது.
இதே நேரம் கடவுச்சீட்டு இல்லாத நிலையிலுள்ளவர்கள் தத்தமது நாட்டு தூதராலயங்கள் மூலம் தற்காலிக கடவுச்சீட்டை பெற்றே நாடு திரும்புவதற்கான தமது பயன ஏற்பாடுகளைத் தொடர முடியும்.
இவ்வாறான பொதுமன்னிப்புக் காலத்தை குவைட் அரசு அறிவித்தும் இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கான எந்தவாரு நடவடிக்கைகளையும் குவைத்தில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயம் மேற்கொள்ளாது தூதரக நுளைவாயிலை மூடிவைத்துள்ளதனாலும், இலங்கை தூதரகம் உறுதியான எந்த தீர்வையும் அறிவிக்காத காரணத்தினாலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் ஆத்திரமுற்ற நிலையில் இன்று (21/04/2020) இன்று குவைதிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.
குவைத் அரசினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு நாடு திரும்பவுள்ள பல்லாயிரக் கணக்கான இலங்கையர்களுள் நாடு செல்வதற்கான பயண ஏற்பாட்டுக்கு தேவையான எந்தவித தஸ்தாவேஜுகளுமற்ற 500 க்கும் 600 க்கும் உட்பட்ட இலங்கையர்களே இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை,
Qatar Tamil News.