Ads Area

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்.

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம். அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், என்று இந்தியா டுடே பேட்டியில் மீடியாக்கள் மற்றும் சில குழுக்களை கடுமையாக சாடியுள்ளார் இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி.

கொரோனா விஷயத்தில் முஸ்லீம்கள் மீது அவதூறு பரப்புவதில் முன்னனியில் உள்ளவர் இந்தியா டுடேயின் (India Today) செய்தி ஆசிரியரான ராகுல் கன்வால் இவர் ஜெருசலேமில் உள்ள ஹிப்ரூ பல்கலை கழக பேராசியர் யூவல் நோவா ஹரரி (Yuval Noah Harari) அவர்களை, இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி பேட்டி எடுத்தார். பேராசிரியர் யூவல் உயிரியல் தொழில் நுட்பத்தில் (biotechnological) ஆய்வுகள் செய்து புத்தகங்கள் எழுதியவர்.

பேராசிரியர் அவர்கள் யூதர் என்பதால் முஸ்லீம்களை திட்டுவார் என நினைத்திருப்பார் போல. ஆனால் ராகுல் கன்வால் எதிர்பார்த்ததற்க்கு மாற்றமாக முஸ்லீம்கள் மீது பழிபோடுபவர்களை மிக கடுமையாக விமர்சித்தார் பேராசிரியர். கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம் (complete non-sense), இது மிகவும் ஆபத்தானது.

மத வெறுப்பு பிரசாரங்களால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இன்னும் அதிகமாகும், அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

யார் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுகின்றாரோ அவர் முகத்திற்க்கு நேராகவே கொரோனா பாதிப்புகள் அதிகமாக நீங்களும் ஒரு காரணம் என சொல்லாமல் சொல்லும் அந்த வீடியோ கீழே இணைப்பில் உள்ளது முழுமையாக பார்க்கவும் (1:10 நிமிடத்திலிருந்து மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டிக்கின்றார்) மத வெறுப்பை கைவிட்டு விட்டு ஒற்றுமையாக ஒருங்கினைத்து செயல்படுவதுதான் இப்போதைய தேவை, இதன் மூலமே இந்தியாவில் கொரோனா பரவலை ஒழிக்க முடியும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க மீடியாக்கள் மற்றும் சில குழுக்களின் மத வெறுப்பு பிரச்சாரம் உதவுகின்றன என்பதை மறைமுகாமாக சுட்டி காட்டியுள்ளார் பேராசியர் யூவல் நோவா ஹரரி.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe