Ads Area

நிந்தவூர் பாலர் பாடசாலையில் மின்விசிறிகளைத் திருடியவர்கள் சம்மாந்துறைப் பொலிசாரால் கைது!

(பாறுக் ஷிஹான்)

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர், அவர்களால் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் மாந்தோட்டை என்னும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருப்பதாக இன்று சனிக்கிழமை (16) சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவரின் வழிநடத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் துர்நடத்தை தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

கைதான குறித்த சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தானும் மற்றுமொரு சந்தேக நபரான 20 வயதான  நபரும் நிந்தவூர் 9 பகுதியில் உள்ள அஹதியா பாலர் பாடசாலை ஒன்றில் கடந்த 6 ஆம் திகதி மின்விசிறிகள் மூன்றை திருடி விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 20 வயதான மற்றையவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து திருடப்பட்ட பொருட்களை வாங்கிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டு அவற்றைக் கைப்பற்றினர்.  கைதான இரு சந்தேக நபர்களையும் தடயப்பொருட்களையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.













சவுதியில் உள்ள இலங்கைத் துாதரகம் தொடர்பில் போலிச் செய்தி விபரம் வீடியோவில்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe