Ads Area

இலங்கையில் அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானம் தொடர்பில் விமர்சித்த மஹேலவுக்கு கிரிக்கெட் சபை பதிலடி.

இலங்கையில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அவசியமா என விமர்சித்த இலங்கை அணி முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலடி கொடுத்துள்ளது.

நகர்ப்புற பகுதியில் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடுவதற்கான கேள்விகள் அதிகரித்திருப்பதாக கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல 25000 தொடக்கம் 40000 வரையான இரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்வையிடக்கூடிய வகையில் மைதானம் ஒன்றின் அவசியத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஹோமாகம பகுதியில் இந்த பெரிய மைதானத்தை நிர்மாணிப்பதற்கான செலவினை கிரிக்கெட் சபையே ஏற்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe