அதானுக்கு மாத்திரமே பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியை பயன் படுத்தலாம். பிரசாரங்களுக்கு அனுமதி இல்லை என வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் பணிப்பாளர் எ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுதொடர்பாக ஏனையோரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அகில இலங்கை உலமா சபை, ஷரீஆ கவுன்சில் மற்றும் தரீக்காக்களின் உயர் மன்றம் ஆகிய அமைப்புக்களின் உலமாக்களோடு கடந்த 12ஆம் திகதி வக்புசபை கூட்டமொன்றை நடத்தியது.
ரமழானின் மீதமுள்ள நாட்களை அமைதியாகவும் சமாதானமாகவும் கழிப்பதற்காகவேண்டி, பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் தவிர்ந்த வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை என்றும் ஈதுல் பித்ர் பெருநாள்வரை வீடுகளில் இருந்தவாறு ஆன்மிக மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் முஸ்லிம்கள் வேண்டிக்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் 15 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட வக்புசபை பணிப்புரைகள் மாற்றமின்றி மறு அறிவித்தல்வரை நடைமுறையில் இருக்கும்.