இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான பல புதிய சட்ட திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் சமீப காலமாக அறிவித்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் அரசு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு குடிமக்களை பணியமர்த்தல், முனிசிபாலிடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்து அதற்கு பதிலாக குடிமக்களை நியமனம் செய்தல், வெளிநாட்டவர் மக்கள்தொகையின் அளவைக் குறைப்பதற்கான திட்டம் போன்ற பல திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருக்கின்றது.
இந்த மசோதா, சம்பந்தப்பட்ட குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பான சட்டம் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் படி, குவைத்தில் அதிகளவு எண்ணிக்கையில் இருக்கும் இந்தியர்கள் தேசிய மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இந்த மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டால், சுமார் 800,000 இந்தியர்கள் நாட்டை விட்டு சட்டப்படி வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.
கடந்த மாதம், குவைத் பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் சபா அவர்கள், குவைத் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதமாக இருக்கும் மக்கள் தொகையினை 30 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2.5 மில்லியன் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - www.khaleejtamil.com