Ads Area

குவைத்தில் இன்று முதல் டேக்ஸியில் 3 பேர் செல்ல அனுமதி : குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

குவைத்தில் நாளை முதல் டேக்ஸியில் 3 பேர் செல்ல அனுமதி : குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

குவைத்தில் நாளை முதல் ஒரே நேரத்தில் 3 பயணிகளை டாக்சிகளில் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது ​​ஒரே நேரத்தில் ஒரு பயணிகள் மட்டுமே டாக்சிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். டேக்ஸி உரிமையாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா வைரஸை தொற்று பரவியதை அடுத்து தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக குவைத் நாட்டில் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் ஒரு பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் டாக்ஸி சேவைகளை இயக்க கடந்த வாரம் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe