Ads Area

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து இலங்கை திரும்ப 19,000 பேர் விண்ணப்பிப்பு.

அமீரகத்திலிருந்து இலங்கை திரும்ப 19,000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதில், விமான டிக்கெட் மற்றும் கட்டண தனிமைப்படுத்தலுக்குத் தேவையான பணம் செலுத்த முடியாதவர்களுக்கு துணைத் தூதரகமே பொருளாதார ரீதியில் உதவி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வணிக ரீதியிலான விமான சேவை இன்னும் துவங்கப்படவில்லை. சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு 7000 வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என துணைத் தூதரக தலைமை அதிகாரி விஜிரெத்னா தெரிவித்தார்.

இந்த சிறப்பு விமான சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்வேஸ் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe