Ads Area

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகளை காணவில்லை! பொதுமக்களிடம் உதவிகோரும் தாய்.


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும், பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா (வயது 55) தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் கடந்த 2017.12.29ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கணவன் வேறு திருமணம் செய்தமையால் பிரிந்து எங்களுடன் வாழ்ந்து வந்தார்.

அதன் பிற்பாடு கடந்த 2017.12.29ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் விழித்து பார்க்கும் போது உறங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை.

மகள் வீட்டில் இருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரணங்களை எடுக்காமல், தான் போட்டிருந்த ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

அதன்பிற்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ஆம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு தொடர்பில் விசாரித்தால் எங்களது மகளை தேடிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இன்னும் எந்த பதிலும் இல்லை. எனவே காணாமல் போன எனது மகளை யாரேனும் கண்டால் 0758304796 என்ற எனது தொலைபேசி இலத்திற்கு அறியத்தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன் என்று தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe