Ads Area

சிறைக்கைதிகளுக்கான 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட ரிஷாத் பதியுதீன்.

சிறைக்கைதிகளுக்கான 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிமித்தம் நேற்றைய தினம் விளக்கமறியல் வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விளக்கமறியல் கைதிகளை கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலேயே அனுமதிப்பதாயினும், கொரோனா சூழ்நிலையின் பின்னணியிலான கட்டாய தனிமைப்படுத்தல் நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்க மறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதனால் அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி ரிஷாட் பதியூதின் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள குறிப்பிடத்தக்கது.

அங்கு பிரத்யேக சிறையில் மேலதிக பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe