சமகாலத்தில் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் மோட்டார் வான சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.