பாறுக் ஷிஹான்.
கல்முனைப் பொலிசாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு 'மீற்றரான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் கல்முனை பேரூந்து நிலையத்தில் COVID-19 விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு இன்று (29) முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த விழிப்புணர்வுச் செயற்பாட்டில் அம்பாறை, கல்முனைப் பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயரட்ன மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர, கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன், தொற்றுநோய்ப் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப், பொலிசார் கலந்து கொண்டு கல்முனை நகரில் சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேரூந்துகளில் கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
அத்துடன், மக்களுக்கு விழிப்புணர்வூட்டுமுகமாக பேரூந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.