Ads Area

சவூதியில் உள்ள இலங்கையர்களை எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு அனுப்ப திட்டம்.

வரவிருக்கும் வாரங்களில் அதிகமான இலங்கையர்களை சிறிய தொகுதிகளாக இலங்கைக்கு அனுப்ப சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தற்போது 135,000 இலங்கையர்கள், நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

அத்துடன் சவூதி அரேபியாவில் சுமார் 4,000 இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்ப தம்மை பதிவு செய்துள்ளார்கள் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பவுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில் தூதரகத்தால் கருணை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என தூதரகம் அறிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe