சம்மாந்துறை அன்சார்.
எதிர் வரும் வியாழக்கிழமை மேலும் 500,000 கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் பிரைவேட் லிமிடெட் (Serum Institute of India Pvt Ltd) இலங்கைக்கான அடுத்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு உறுதிப்படுத்தியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமனா தெரிவித்துள்ளார்.
500,000 Oxford AstraZeneca Covishield vaccine தடுப்பூசியை வியாழக்கிழமை இரவு இலங்கை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.