பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் கல்விக்கும் கரம் கொடுப்போம் எனும் தொனிப் பொருளில் தரம் 5 மாணவ மாணவிகளுக்கு முன்னோடி பரீட்சை நடாத்தி வைப்பு.
மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் "கல்விக்கும் கரம் கொடுப்போம்" எனும் தொனிப் பொருளில் மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்குறிய எப்ரல் மாதத்திற்கான முன்னோடி பரீட்சை நேற்று (4) அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மேலும் இப்பரீட்சைகயில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு வருகின்ற சனிக்கிழமை இடம்பெறும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது
மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் மாதாந்தம் ஓர் கல்விச் செயற்திட்டம் எனும் அடிப்படையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் கழகத்தினால் மாதத்திற்கு இருமுறை இவ்வாறு புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு முன்னோடி பரீட்சை நடாத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.