Ads Area

சம்மாந்துறையில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு : சுகாதார வழிமுறைகளை பேணாத வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை !

முஹம்மட் நபீல்

நாட்டில் பரவலாக  பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை  பிரதேச வர்த்தக நிலையங்கள், தனியார் மற்றும் அரச வங்கிகள் போன்ற இடங்களில் சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர், கொரோனா தடுப்புக் குழு மற்றும் பொலிஸாரினால் திடீர் சுகாதார சுற்றி வளைப்பு இன்று இடம் பெற்றது.

இந்த சுற்றிவளைப்பின் போது சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக்கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 

மேலும் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து இங்கு வர்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. 








 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe