Ads Area

இலங்கை-பங்களாதேஷ்-நேபாளம்-பாகிஸ்தான் விமானங்கள் குவைத் நுழையத் தடை விதிப்பு.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களை இடைநிறுத்துவதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் விமானங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு முன்னெடுக்கப்படும் விமான சேவைகளை குவைத் இடை நிறுத்தியிருந்தது.

குறைந்தது 14 நாட்கள் வரையாவது இத் தடை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe