Ads Area

கல்முனையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதி மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590க்கும் அதிகமான போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியால் நேற்று (9) மாலை சந்தேக நபர் வட்ட வாகனமொன்றில்  சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக மாவட்ட புலனாய்வுப்பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியிலிருந்து இவ்வாறு 590 போதை மாத்திரைகளைக் கடத்தி தற்போது கைதானவர் சாய்ந்தமருதுப் பகுதியைச்சேர்ந்த 25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர் எனவும், அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதை அடங்கிய மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாகவும் விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

மேலும் இச்சுற்றிவளைப்பில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபல்களான செலர் (40313),  ரதீஸ்குமார் (89382), நிமால் (81988),  போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார (51423), அதிகாரி (47526), அமரசிங்க (74645),?பொலிஸ் சாரதி ரெஜிபவன் (3893) மற்றும் சிவில் பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்  றிஹால் (6045) ஆகியோடரங்கிய பொலிஸ் குழுவினர் இத்தேடுதலில் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட590 போதை மாத்திரகள் மற்றும் ஹெரோயின் மற்றும் சந்தேக நபர் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய  வட்டா ரக வாகனம் என்பன கல்முனை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனைப்  பொலிஸார்  குறிப்பிட்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe