Ads Area

வளத்தாப்பிட்டியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கசிப்பு பெரல் வெடித்ததில் உயிரிழப்பு.

 பாறுக் ஷிஹான் 

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது, கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்  வியாழக்கிழமை (10)  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளத்தாப்பிட்டியைச்சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது, கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து சிதறியதையடுத்து தீபரவியதையடுத்து சம்பவ இடத்தில் 56 வயதுடைய தந்தை இறந்தததையடுத்து தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்த உறவினரான 26 வயதுடையவர் வீட்டில் தாயாருடன் தகராறு காரணமாக தீயிட்டதாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான் மேலதிக விசாணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe