Ads Area

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓய்வூதியம் பெறுவோருக்கு உதவி வரும் படையினர்.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

ஓய்வூதியகாரர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று பணம் பெறுவதற்கான உதவிகளை இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினர் உதவி வருகின்றனர்.

அம்பாரை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓய்வூதியம் பெறும் நபர்கள் வங்கிகளுக்குச் சென்று தமது ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் இணைந்து அழைத்துச் செல்லும் நடவடிக்கை  வியாழக்கிழமை (10) மற்றும் வெள்ளிக்கிழமை (11) இரு நாட்களாக இடம்பெற்று வருகின்றன.

மேற்குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரச் பரிசோதர்களினால் பேரூந்து தொற்று நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓய்வூதியகார்களுக்கு முகக்கவசம் மற்றும்  சுகாதார விதிமுறைகளுக்கமைவாக வங்கிகளுக்கு அழைத்துச்சென்று ஓய்வுதியம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்போது, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர்  எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe