Ads Area

கோறளைப்பற்றுக்கு மாற்றம் செய்யப்பட்ட பதிவாளர் பிரிவை இடைநிறுத்தக்கோரி ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் மகஜர்.

மேற்படி விடயம் தொடர்பாக தங்களுக்கு அறியத்தருவது 1973ம் ஆண்டிலிருந்து 31.05.2021ஆம் திகதி வரை சுமார் 48 வருடங்களுக்கு மேலாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இயங்கி வந்த பதிவாளர் பிரிவானது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரிவின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டு இயங்கி வந்தது.

இப்பதிவாளர் பிரிவில் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய 16 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியாக இது செயற்பட்டு வந்தது. 

இந்தப்பதிவாளர் பிரிவின் பிரதான வைத்தியசாலையான ஆதார வைத்தியசாலை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழுள்ள பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் அமையப்பெற்றுள்ளது.

அண்மையில் அராசாங்க அதிபரிடமிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த வைத்தியசாலையானது கோறளைப்பற்றில் அமைந்துள்ள ஒரு கிராம சேவகர் பிரிவில் அமையப்பெற்றுள்ளதாக ஒரு தவறான தகவலின் அடிப்படையில் குறித்த வைத்தியசாலையின் பதிவாளர் பிரிவுகள் எதிர்காலத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் ஆவணங்கள் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தங்களுக்கு அறியத்தருவதானது,

தாங்கள் இப்பிரதேசத்தின் பிரதேச செயலாளர் என்ற வகையிலும் இப்பதிவாளர் பிரிவானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இதுவரை காலமும் இயங்கி வந்தது என்ற அடிப்படையிலும், ஆதார வைத்தியசாலை அமையப்பெற்றுள்ள கிராம சேகவர் பிரிவு தொடர்பில் எல்லை நிர்ணயத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பதிவாளர் பிரிவை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழுள்ள பிரிவாகக்கருதி ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பதிவாளர் பிரிவில் தொடர்ந்தும் செயற்படுவதற்கான செயற்பாட்டை ஏற்படுத்தித்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இது விடயம் தொடர்பில் பொதுமக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு தெரிவிக்கப்படுகின்ற நிலையிலும் ஆதார வைத்தியசாலை வாழைச்சேனை அமையப்பெற்றுள்ள கிராம சேவகர் பிரிவானது இன்று வரை கோறளைப்பற்று மத்திக்குரியதாக அமைப்பெற்றிருப்பதாலும் மேற்படி விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்தி, உடனடியாக தங்களுக்கு கிடைத்த அறிவுறுத்திலின் பிராகாரம் மாற்றம் செய்யப்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திலிருந்த பதிவாளர் பிரிவை மீண்டும் எமது பிரதேச செயலகப்பிரிவில் இயங்குவதற்கான அனுமதியினை அரசாங்க அதிபரூடாகப்  பெற்றுத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இது தொடர்பான கோரிக்கை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.டி.அஸ்மி, உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர், எம்.ஐ.ஹாமீட் லெப்பை, ஏ.ஜி.அஸீஸுல் றஹீம், எஸ்.ஏ.அன்வர், எம்.ரீ.எம்.அன்வர் மற்றும் சட்டத்தரணி ராசிக் ஆகியோர்களினால் பிரதேச செயலாளரிடம் இன்று (03) கையளிக்கப்பட்டது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe