சம்மாந்துறை அன்சார்.
திங்கட்கிழமை (23) முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் ஏனைய பேக்கரிப் பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ நிறையுள்ள கேக் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk