Ads Area

கல்முனை கடலில் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான கொப்புறா மீன் பிடிக்கப்பட்டது!

கல்முனை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 12 அடி நீளமான கொப்புறா மீன் இன்று (05) சிக்கியுள்ளது. 

இந்த மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த மீன் வியாபாரியின் வலையில் சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் பிடிபட்டது.

தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source - http://www.battinews.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe