Ads Area

கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த இளைஞனை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் 135 கிராமுடன் குறித்த  இளைஞனை   (03)  கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த இளைஞன் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து துரிதமாகச் செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 30 வயதுடடைய இளைஞனைக்கைது செய்ததுடன் அவர் வசமிருந்த 135 கிராம் கேரளா கஞ்சாவினையும் மீட்டுள்ளனர். 

மேலும், இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் உட்பட அவர் வசம் மீட்கப்பட்ட  சான்றுப்பொருட்கள் சகிதம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe