Ads Area

கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையில் அனுதாபம் தெரிவிப்பு..!

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (02) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது. மேலும், இன்றைய அமர்வின் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரைபு பாதீடு பொதுச்சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாய் அங்கீகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe