Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்கம்பிட்டியில் "செளபாக்கியா" வீடு திறந்து வைப்பு!

 (சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி "செளபாக்கியா" விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் (17) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இவ் வீட்டிற்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக ஆறு இலட்சம் ரூபா மானிய நிதியுதவியின் கீழ்,பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்கம்பிட்டி கிராம சேவையார் பிரிவில் வசிக்கும் பயனாளிக்கே இவ்வீடு வழங்கி வைக்கப்பட்டது.

நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம்.அஸ்லம் , சம்மாந்துறை சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம்,சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம்பாரிஸ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe