Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் அறநெறிப்பாடசாலை திறப்பு விழா.

 (காரைதீவு சகா)

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் அறநெறிப்பாடசாலை க்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதியுதவியுடனும், சிவனருள் பவுண்டேசன் நிதியுதவியுடனும் அமைக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை கட்டிடமானது ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வு அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் எஸ். தினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன், கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக  சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம். எல். தாஸிம், சிவனருள் பவுண்டேசனுடைய தலைவர் கலாநிதி அனுசியா,சேனாதிராஜன், செயலாளர் வே. வாமதேவன்,பொருளாளர் க. ஜனாத்தனன்,  மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி  சம்மாந்துறை பிரதேசசெயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர் திருமதி க. ஶ்ரீபிரியா ,பாடசாலைஅதிபர் எஸ். இளங்கோபன் மற்றும் ஆலய உபசெயலாளர் வி.மோகன், ஆலய நிர்வாகத்தினர் அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் பரிசுகள் வழங்கப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe