ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாய் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது வீட்டுப் பணிப் பெண்னைக் கொலை செய்த அரபு நாட்டவர் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனையினை 15 ஆண்டுகால சிறைத்தண்டனையாக குறைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆபத்தான நிலையில் துபாயில் உள்ள மருத்துவமனைக்கு அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் அழைத்து வந்ததாகவும் குறித்த பெண் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் வழங்கியமையை அடுத்து அப் பெண்ணை வைத்தியசாலைக்கு அனுமதித்த அரபு நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரனையின் போது தனது வீட்டில் பணிபுரிந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணை மாதக் கணக்கில் தடுத்து வைத்து தாக்கியதற்காக குறித்த 58 வயது அரபு நாட்டவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது ஆயுள் தண்டனையினை 15 ஆண்டுகால தண்டனையாக குறைத்துள்ளது. மேலும் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர் நாடுகடத்தப்படவும் உள்ளார்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்